500 மில்லியன் WhatsApp பயனர் தகவல் திருட்டு!

சமீபத்தில், வெளியான தகவலின் படி, சுமார் 500 மில்லியன் வாட்ஸ்அப் பயனர்களின் தகவல்கள் டார்க் வெப் உலகில் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதில் சில மில்லியன் இந்திய பயனர்களின் வாட்ஸ்அப் தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளது என்பதே சிக்கலாக பார்க்கப்படுகிறது. இந்த அசம்பாவிதம் எப்படி நடந்தது, இதில் உங்கள் வாட்ஸ்அப் கணக்கும் அடங்குமா என்பது போன்ற தகவலை பார்க்கலாம்.

விற்பனைக்கு வந்த தகவல்கள்!

வாட்ஸ்அப் சாட் என்று வரும் போது, சாட்கள் அனைத்தும், எப்பொழுதும் என்க்ரிப்ட் செய்யப்பட்டிருக்கும். இருப்பினும், அவற்றில் உள்ள தரவு பாதுகாப்பானது அல்ல என்று கூறப்படுகிறது. இப்போது 500 மில்லியன் பயனர்களின் வாட்ஸ்அப் எண்களைக் கொண்ட தரவுத்தளம் சமீபத்தில் ஹேக்கிங் சமூக மன்றத்தில் விற்பனைக்கு வந்துள்ளதாக புதிய அறிக்கை இப்போது தெரிவிக்கிறது.

ஒரு விற்பனையாளர் கிட்டத்தட்ட 500 மில்லியன் வாட்ஸ்அப் பயனர்களின் தரவுத்தளத்தை விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளார் என்று சைபர்நியூஸ் அறிக்கை கூறுகிறது. தரவுத்தளத்தில் உலகம் முழுவதும் உள்ள வாட்ஸ்அப்பை தீவிரமாகப் பயன்படுத்தும் 487 மில்லியன் தொலைப்பேசி எண்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.

அதிக பாதிப்பு

வாட்ஸ்அப் சேவையகங்களை ஹேக் செய்தோ அல்லது வாட்ஸ்அப்பை இயக்கிய சைபர் தாக்குதல் மூலமாகவோ இந்த தரவு பெறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அமெரிக்காவைச் சேர்ந்த 32 மில்லியன் பயனர் எண்கள், இங்கிலாந்திலிருந்து 11 மில்லியன் பயனர் எண்கள், ரஷ்யாவிலிருந்து 10 மில்லியன் பயனர் எண்கள், இத்தாலியில் இருந்து 35 மில்லியன் பயனர்கள், சவூதி அரேபியாவிலிருந்து 29 மில்லியன் பயனர்கள் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

இந்தியா உண்டா?

வாட்ஸ்அப்பில் பதிவுசெய்யப்பட்ட இந்தியாவில் இருந்து சுமார் 6 மில்லியன் பயனர்களின் தரவுகளும் இந்தப் பட்டியலில் உள்ளன. ஸ்கிராப்பிங் முறை மூலம் ஹேக்கரால் இந்த தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த வாட்ஸ்அப் எண்கள் அனைத்தும் பயனர்களின் தொலைப்பேசி எண்களைச் சேமிக்கும் பல்வேறு இணையதளங்களில் இருந்து திருடப்பட்டவை என்று கூறப்பட்டுள்ளது.

என்ன நடக்கும்?

இங்கு பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து எண்களும் செயலில் உள்ள WhatsApp கணக்குகளுடன் தொடர்புடையவை என்பதை விற்பனையாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இங்கு பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து ஃபோன் எண்களும் ஸ்பேமிங், ஃபிஷிங் முயற்சிகள், அடையாள திருட்டு மற்றும் பிற இணையக் குற்றச் செயல்களுக்கு இரையாகலாம் என்பதனால் வாட்ஸ்அப் பயனர்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாத்துக் கொள்ள வழி?

இந்த தரவு கசிவிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள நீங்கள் ஒன்றுமே செய்ய முடியாது என்பதே உண்மை. அம்பலமாக்கப்பட்ட தரவுகளை எதுவும் செய்ய முடியாது. ஆனால் உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க நீங்கள் செய்யக்கூடிய சில விஷயங்கள் உள்ளன. குறிப்பாக அடையாள திருட்டு மற்றும் பிற இணையக் குற்றச் செயல்களுக்கு இரையாகலாம் என்பதனால், இந்த தரவு கசிவிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள நீங்கள் முதலில் தெரியாத எண்களில் இருந்து வரும் செய்திகளுக்கு எளிதில் பதிலளிக்காமல் இருப்பது சிறந்தது. விவரங்கள் அல்லது தகவலைக் கேட்டு அறியப்படாத எண்ணிலிருந்து வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி வந்தால் அதை நிராகரிக்கவும்.

செட்டிங்ஸில் மாற்றுங்கள்!

பாதுகாப்பாக இருக்க அத்தகைய எண்களை பிளாக் செய்வது சிறந்தது. கூடுதலாக, நீங்கள் வாட்ஸ்அப்பின் பிரைவசி செட்டிங்ஸ் சென்று உங்கள் ப்ரோபைல் புகைப்படம், உங்கள் வாட்ஸ்அப் கணக்கின் பயோ போன்ற விபரங்களை உங்கள் காண்டக்ட்டில் இல்லாதவர்களிடமிருந்து ஹைடு செய்து வைப்பது சிறப்பானது. தெரியாத நபர்களிடம் இருந்து வரும் லிங்க் ஐ கிளிக் செய்யவோ, பதிலளிக்கவோ வேண்டாம்.