அன்லிமிடெட் டேட்டாவுடன் ரூ.199 முதல் இரண்டு மலிவான திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது ஏர்டெல்.

Highlights

  • ஏர்டெல் தனது பிராட்பேண்ட் பயனர்களுக்காக இரண்டு மலிவான திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • ஏர்டெல் பிராட்பேண்ட் சேவையான ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் பயனர்களுக்கு இரண்டு திட்டங்களைக் கொண்டுள்ளது.
  • இந்த இரண்டையும் பிராட்பேண்ட் ஸ்டாண்ட்பை பிளான்ஸ் என்ற பெயரில் நிறுவனம் கொண்டு வந்துள்ளது.

 

ஏர்டெல் நிறுவனம் தனது பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில் இரண்டு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இரண்டு திட்டங்களும் முறையே ரூ.199 மற்றும் ரூ.399 விலையில் உள்ளன. மேலும் இந்த திட்டங்கள் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் பயனர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Airtel நிறுவனம் புதிய பிராட்பேண்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டங்களின் மூலம் பெறும் அனைத்து நன்மைகள் பற்றி இப்போது பார்க்கலாம்.

 

ஏர்டெல் 199 பிராட்பேண்ட் Standby திட்டத்தின் நன்மைகள்

ரூ.199 திட்டமானது 10Mbps வேகத்தில் வரம்பற்ற டேட்டாவை வழங்குகிறது.

வாடிக்கையாளர்கள் இந்த நுழைவு நிலை திட்டத்தை 5 மாதங்களுக்கு எடுக்க வேண்டும். எனவே பயனர்கள் மொத்தம் ரூ.1174 (ஜிஎஸ்டி உட்பட) செலுத்த வேண்டும்.

மேலும் ஒரு முறை நிறுவல் கட்டணம் ரூ 500 மற்றும் அதற்கான ஜிஎஸ்டியும் செலுத்த வேண்டும்.

இந்த திட்டத்தை வாங்கும் பயனர்களுக்கு ரூட்டரை இலவசமாக வழங்கும்.

ஏர்டெல் 399 பிராட்பேண்ட் Standby திட்டத்தின் நன்மைகள்

இந்த ஏர்டெல் பிராட்பேண்ட் ரூ.399 திட்டமானது 10Mbps வேகத்தில் வரம்பற்ற டேட்டாவை வழங்குகிறது.

இந்தத் திட்டமானது எக்ஸ்ட்ரீம் பாக்ஸ், இலவச வைஃபை ரூட்டர் மற்றும் 350க்கும் மேற்பட்ட டிவி சேனல்களுடன் வருகிறது.

குறைந்தபட்சம் 5 மாதங்களுக்கு திட்டம் எடுக்கப்பட வேண்டும்.

ஒரு முறை நிறுவல் கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி தொகையையும் சேர்த்து இந்த திட்டத்திற்கு ரூ.3000  செலவாகும்.

 

இரண்டு திட்டங்களிலும் அழைப்பு இலவசம்

Airtel Xtreme Fiber பயனர்கள் பிராட்பேண்ட் ஸ்டாண்ட்-பை திட்டத்தைப் பெறுபவர்கள்,  டேட்டாவுடன் சேர்த்து வரம்பற்ற (unlimited calls) அழைப்பு வசதியைப் பெறுவார்கள். இது மட்டுமல்லாமல், எந்த நேரத்திலும் திட்டத்தை மேம்படுத்துவதன் மூலம், பயனர்கள் தங்கள் திட்டங்களில் கிடைக்கும் வேகத்தையும் மேம்படுத்தலாம்.