Home News கேரளாவில் கேம் விளையாடும் போது மொபைல் போன் வெடித்து 8 வயது சிறுமி உயிரிழப்பு

கேரளாவில் கேம் விளையாடும் போது மொபைல் போன் வெடித்து 8 வயது சிறுமி உயிரிழப்பு

Highlights
  • சிறுமி கேம் விளையாடும் போது மொபைலை சார்ஜ் செய்தபடியே விளையாடி இருக்கிறார்
  • மூன்று வருடத்திற்கு முன்பு வாங்கிய அந்த மொபைலில் பேட்டரியும் மாற்றப்பட்டுள்ளது.
  • சிறுமிக்கு இந்த வெடிப்பில் முகம் மற்றும் கைகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன

 

கேரளாவின் திருச்சூரில் ஏப்ரல் 24 திங்கட்கிழமை எட்டு வயது சிறுமி ஒருவர் கேம் விளையாடிக் கொண்டிருந்த கைத்தொலைபேசி வெடித்துச் சிதறியதால் உயிரிழந்தார். இவர் பட்டிப்பரம்பைச் சேர்ந்த ஆதித்யஸ்ரீ என்பதும்,  திருவில்வாமலையில் உள்ள கிறிஸ்ட் நியூ லைஃப் பள்ளியில் அவர் 3 ஆம் வகுப்பு படித்து வந்ததும் தெரியவந்துள்ளது.

திங்கள்கிழமை இரவு இந்த சம்பவம் நிகழ்ந்து இருக்கிறது. மருத்துவர்களின் தீவிர முயற்சிக்கு மத்தியிலும், அவர் இறந்தார். சிறுமி மொபைலில் சார்ஜ் போட்டபடியே விளையாடிக் கொண்டு இருந்ததாகத்  தகவல்கள் தெரிவிக்கின்றன. பழையனூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த உள்ளூர் காவல்துறை அதிகாரிகள் குழு, இந்த சம்பவத்தைப் பற்றிய விசாரணையைத் தொடங்கியுள்ளது. மேலும் தடயவியல் குழுவும் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

 

இந்த போன் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்டதாகவும், அதன் பேட்டரி கடந்த ஆண்டு மாற்றப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து நடந்தபோது ஆதித்யஸ்ரீ தனது பாட்டியுடன் இருந்திருக்கிறார்.  இந்த விபத்தில் குழந்தையின் முகம் மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

 

மொபைல் போன் வெடிப்பது இது முதல் நிகழ்வு அல்ல. நமது 91மொபைல்ஸ் அறிக்கையின்படி, சமீபத்தில் பீகாரில் ஒரு தொலைபேசி படுக்கையில் வைக்கப்பட்டிருந்தபோது வெடித்தது. அந்த போன் பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள மொஹதிநகரில் வசிக்கும் சஞ்சீவ் ராஜா என்பவருக்கு சொந்தமானது. சார்ஜருடன் இணைக்கப்படாத போதும் போன் வெடித்ததாக சஞ்சீவ் கூறினார்.

 

மொபைல் வெடிப்பு சம்பவங்களைத் தவிர்க்க மனதில் கொள்ள வேண்டியவை..